” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பாடுபடு!

நகுலா சிவநாதன்
பாடுபடு!
அன்பும் பண்பும் குணமாகும்
அதுவே அகத்தின் அழகாகும்
இன்பம் என்றும் இதமாகும்
இதுவே மகிழ்வின் அடையாளம்
துன்பம் என்றும் அகற்றிவிடு
துணிவை என்றும் வரமாக்கு
வென்று வாழ்வைச் செழிப்பாக்கு
வெற்றி என்றும் உனதாகும்

காடும் மேடும் வளமாக்கு
காசை கொடுத்து பயிராக்கு
வீடும் நாடும் விளைவித்து
விதையைப் போட்டு உரமாக்கு
தேடும் தேடல் விதையாக்கு!
தேட்டம் என்றும் வரமாக்கு
ஓடும் முயற்சி வென்றிடவே
ஓயா அலையாய்ப் பாடுபடு!
நகுலா சிவநாதன் 1841

Author: