பாடுபடு!

நகுலா சிவநாதன்
பாடுபடு!
அன்பும் பண்பும் குணமாகும்
அதுவே அகத்தின் அழகாகும்
இன்பம் என்றும் இதமாகும்
இதுவே மகிழ்வின் அடையாளம்
துன்பம் என்றும் அகற்றிவிடு
துணிவை என்றும் வரமாக்கு
வென்று வாழ்வைச் செழிப்பாக்கு
வெற்றி என்றும் உனதாகும்

காடும் மேடும் வளமாக்கு
காசை கொடுத்து பயிராக்கு
வீடும் நாடும் விளைவித்து
விதையைப் போட்டு உரமாக்கு
தேடும் தேடல் விதையாக்கு!
தேட்டம் என்றும் வரமாக்கு
ஓடும் முயற்சி வென்றிடவே
ஓயா அலையாய்ப் பாடுபடு!
நகுலா சிவநாதன் 1841

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading