நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பாடுபடு!

நகுலா சிவநாதன்
பாடுபடு!
அன்பும் பண்பும் குணமாகும்
அதுவே அகத்தின் அழகாகும்
இன்பம் என்றும் இதமாகும்
இதுவே மகிழ்வின் அடையாளம்
துன்பம் என்றும் அகற்றிவிடு
துணிவை என்றும் வரமாக்கு
வென்று வாழ்வைச் செழிப்பாக்கு
வெற்றி என்றும் உனதாகும்

காடும் மேடும் வளமாக்கு
காசை கொடுத்து பயிராக்கு
வீடும் நாடும் விளைவித்து
விதையைப் போட்டு உரமாக்கு
தேடும் தேடல் விதையாக்கு!
தேட்டம் என்றும் வரமாக்கு
ஓடும் முயற்சி வென்றிடவே
ஓயா அலையாய்ப் பாடுபடு!
நகுலா சிவநாதன் 1841

Author: