” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பார்த்தீபம் ஒளிர்கிறது..

வியாழன் கவி 2213!!

பார்த்தீபம் ஒளிர்கிறது..!!

வானத்து வெளியெல்லாம்
ஒளி கொண்ட உன் முகம்
பாரதத்தின் செயல் தன்னால்
பாராமுகமான காவியம்
காற்றோடு கரைந்ததோ
கனவாகிப் போனதோ
அல்ல கண்களுக்குள்
நினைவாகிச் சிறைப்பட்டது..

ஊரெழு மண் ஈந்த மகன்
உணர்வோடு மொழி ஆழ
கனலாகிக் கரைந்தான்
கண்ணீராகிக் கசிந்தான்
நல்லூரான் வீதியிலே
நல்ல தொரு திருமகன்
மொழி வாழ உயிர் ஈந்தான்..

ஆண்டுகள் எத்தனை அகல
மீளாத துயரில் தேசம் கரைய
இராசையா பார்த்தீபன்
இன்னும் இறையாய்த் தானிருக்க
இலக்கு ஒன்று இலட்சியமாக
நம்பிக்கை தேக்கிய ஔடராய்
அண்ணல் திலீபன் விழித்திருப்பான்..
சிவதர்சனி இராகவன்
24/9/2025

Author: