பார்த்தீபம் ஒளிர்கிறது..

வியாழன் கவி 2213!!

பார்த்தீபம் ஒளிர்கிறது..!!

வானத்து வெளியெல்லாம்
ஒளி கொண்ட உன் முகம்
பாரதத்தின் செயல் தன்னால்
பாராமுகமான காவியம்
காற்றோடு கரைந்ததோ
கனவாகிப் போனதோ
அல்ல கண்களுக்குள்
நினைவாகிச் சிறைப்பட்டது..

ஊரெழு மண் ஈந்த மகன்
உணர்வோடு மொழி ஆழ
கனலாகிக் கரைந்தான்
கண்ணீராகிக் கசிந்தான்
நல்லூரான் வீதியிலே
நல்ல தொரு திருமகன்
மொழி வாழ உயிர் ஈந்தான்..

ஆண்டுகள் எத்தனை அகல
மீளாத துயரில் தேசம் கரைய
இராசையா பார்த்தீபன்
இன்னும் இறையாய்த் தானிருக்க
இலக்கு ஒன்று இலட்சியமாக
நம்பிக்கை தேக்கிய ஔடராய்
அண்ணல் திலீபன் விழித்திருப்பான்..
சிவதர்சனி இராகவன்
24/9/2025

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading