நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பார்த்தீபம் ஒளிர்கிறது..

வியாழன் கவி 2213!!

பார்த்தீபம் ஒளிர்கிறது..!!

வானத்து வெளியெல்லாம்
ஒளி கொண்ட உன் முகம்
பாரதத்தின் செயல் தன்னால்
பாராமுகமான காவியம்
காற்றோடு கரைந்ததோ
கனவாகிப் போனதோ
அல்ல கண்களுக்குள்
நினைவாகிச் சிறைப்பட்டது..

ஊரெழு மண் ஈந்த மகன்
உணர்வோடு மொழி ஆழ
கனலாகிக் கரைந்தான்
கண்ணீராகிக் கசிந்தான்
நல்லூரான் வீதியிலே
நல்ல தொரு திருமகன்
மொழி வாழ உயிர் ஈந்தான்..

ஆண்டுகள் எத்தனை அகல
மீளாத துயரில் தேசம் கரைய
இராசையா பார்த்தீபன்
இன்னும் இறையாய்த் தானிருக்க
இலக்கு ஒன்று இலட்சியமாக
நம்பிக்கை தேக்கிய ஔடராய்
அண்ணல் திலீபன் விழித்திருப்பான்..
சிவதர்சனி இராகவன்
24/9/2025

Author: