மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

பாலதேவகஜன்

அழகு

அடிக்கிற காத்தில
அலையுற சருகா
நா ஆனே புள்ள
உன்ன ஒரு தரம் பாத்தே
பதறுதென் மனசு
மறுமுறை பாத்தா
இயங்குமோ ஏ இதயம்?

துடிக்கிற இளமை
துரத்துதே உனையே
வெடிக்கிற அளவில
துடிக்குதே இதயம்
நொடி நொடி கணக்கா
நினைக்கிறேன் உனையே!
படிச்சது எல்லாம்
மறந்தே போச்சு
ஏ மனசில படிஞ்சது
உ நினைப்பேயாச்சு.

வடிச்ச சிலையா
வருடும் உன் அழகு
பிடிச்சே போச்சு
மடிச்சு வைச்ச
ஏ காதல் கடிதம்
நீ பிரிச்சு பாத்து
பிடிச்சு போனதாய்
கண் அடிச்சு காதலை சொல்ல
மூணு முடிச்ச போட்டு
உன்ன மணம் முடிச்சு
உ மடி சாய்ந்து
வாழணும் பல்லாண்டு.

கவரிமான் விழிகள்
கவருதே எனையே!
கடந்து நீ! போனா
கலங்குவேன் தனியே!

தீட்டிய மையழகு
தீண்டுதென் நெஞ்சம்!
தீரா ஆசைகள்
தீருமோ கொஞ்சம்!

அந்தி மஞ்சள் வான
அசல் நிறந்தவளே! உனை
அடையவே விளைகிறேன்
அடியேன் நானே!

சென்னிறத்து செவ்விதழால்
சிவக்கணும் என் தேகம்!
செதுக்கிவைச்ச பல்லாலே
சிலிர்க்கணும் என் ரோமம்!

வாழ்வு முளுவதும்
வாழணுமே உன்னோடு!
வந்து சேர்ந்துவிடு
வாழ்வை தொடங்கிடுவோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading