அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

பாலதேவகஜன்

பாமுகமே வாழி

பார்ப்போரும் கேட்போரும்
பரவசம்! கொள்வாரே
படைப்போரும் பகிர்வோரும்
பரிணாமம்! அடைவாரே
பாமுகமே! உன் மலர்வாலே.

ஆற்றலும் ஆளுமையும்
அகன்றிடாது காத்துநின்ற
அரும்பணியை ஆற்றுகின்ற
பாமுகமே! போற்றி போற்றி.

தலைமுறைகள் தாண்டியுமே
தமிழ் பரம்பும் தம்பணியை
தளர்வின்றியே தொடர்ந்திடும்
பாமுகமே! போற்றி போற்றி.

இலைமறை காயாக
இருப்போரின் திறமைகளை
வெளிக்காட்டி ஒளிர்விக்கும்
பாமுகமே போற்றி போற்றி.

சந்தம் சிந்தும் சந்திப்பை
செவ்வனே ஆற்றுகின்ற
பாவையண்ணாவை தந்த
பாமுகமே! போற்றி போற்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading