” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பாலதேவகஜன்

பாமுகமே வாழி

பார்ப்போரும் கேட்போரும்
பரவசம்! கொள்வாரே
படைப்போரும் பகிர்வோரும்
பரிணாமம்! அடைவாரே
பாமுகமே! உன் மலர்வாலே.

ஆற்றலும் ஆளுமையும்
அகன்றிடாது காத்துநின்ற
அரும்பணியை ஆற்றுகின்ற
பாமுகமே! போற்றி போற்றி.

தலைமுறைகள் தாண்டியுமே
தமிழ் பரம்பும் தம்பணியை
தளர்வின்றியே தொடர்ந்திடும்
பாமுகமே! போற்றி போற்றி.

இலைமறை காயாக
இருப்போரின் திறமைகளை
வெளிக்காட்டி ஒளிர்விக்கும்
பாமுகமே போற்றி போற்றி.

சந்தம் சிந்தும் சந்திப்பை
செவ்வனே ஆற்றுகின்ற
பாவையண்ணாவை தந்த
பாமுகமே! போற்றி போற்றி.

Nada Mohan
Author: Nada Mohan