நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பாலதேவகஜன்

பொங்கலோ பொங்கல்

ஊரெல்லாம் பொங்கல்
உளமெல்லாம் துள்ளல்
உதித்திடும் அவனுக்காய்
உணர்வோடு பெரும் பொங்கல்

கதிர்தந்த கதிரவனிற்கு
பொங்கலோ பொங்கல்
வண்ண வண்ண கோலங்களின்
நடுவினிலே பொங்கிடுமே!

உயிர் வாழ உணவுதந்த
உத்தம உழவர்களை
உயரத்தில் வைக்கின்ற
உன்னத பொங்கல்.

தன்னொளி தந்து
பயிரின் உயிர்காத்த
கதிரவனிற்கு நன்றி கூறும்
காத்திரமான பொங்கல்.

கதிரவன் ஒளிக்கதிரை
கண்டுகொண்ட பொங்கற்பானை
பொங்கி வழிந்து மகழ்வுகாட்டும்
தைத்திருநாள் பொங்கல்.

இன்பம் தரும் பொங்கலினை
பொங்கலோ பொங்கலென்றை
கூடி முழங்கிடுவோம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.

Nada Mohan
Author: Nada Mohan