அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

பிஞ்சினை வருத்தாதே

சர்வேஸ்வரி சிவருபன்

பிஞ்சினை வருத்தாதே

கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //

வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //

பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //

கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //

பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //

சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //

ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //

காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //

சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //

சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //

அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //

வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //

கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //

பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading