” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புது வருடம்

ராணி சம்பந்தர்

புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில் குதித்ததே திருநாளென

மருத்து நீரில் தலை முழுகிடவே
பெருத்த பெரும் பாவம் கழுவிட
வருத்தும் சோக நோயில் அழுதிட
மானிடர் தேகமோ தொழுதிடவே

பூமி சூரியன் சுற்றிய களைப்பிலே
சாமி போலக் கூட வரும் பரிவாரக்
கிரகங்கள் குளிர்ச்சி அடைந்திட
மோசம் செய்யும் தோஷம் நீங்கிட

திரண்டு வரும் உற்றார் ஒன்றிட
கூடித் தூபமிடும் பொன்னாளில்
பெறும் கைவியளமும் உள்ளம் மலரத்
தரணி எங்கும் கொண்டாடும் இப்
புது வருடமே இப் புது வருடம் .

Nada Mohan
Author: Nada Mohan