நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

புது வருடம்

ராணி சம்பந்தர்

புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில் குதித்ததே திருநாளென

மருத்து நீரில் தலை முழுகிடவே
பெருத்த பெரும் பாவம் கழுவிட
வருத்தும் சோக நோயில் அழுதிட
மானிடர் தேகமோ தொழுதிடவே

பூமி சூரியன் சுற்றிய களைப்பிலே
சாமி போலக் கூட வரும் பரிவாரக்
கிரகங்கள் குளிர்ச்சி அடைந்திட
மோசம் செய்யும் தோஷம் நீங்கிட

திரண்டு வரும் உற்றார் ஒன்றிட
கூடித் தூபமிடும் பொன்னாளில்
பெறும் கைவியளமும் உள்ளம் மலரத்
தரணி எங்கும் கொண்டாடும் இப்
புது வருடமே இப் புது வருடம் .

Nada Mohan
Author: Nada Mohan