” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புத்தி தடுமாறுதலால்

புத்தி தடுமாறுதலால்
செல்வி நித்தியானந்தன்

ஓடிஓடிதேடும் உழைப்பு
ஓய்வு இன்றி நாடிய புழைப்பு
உடல் நோவு பெருங் களைப்பு
உபதேசம் மட்டும் பாரிய எடுப்பு

நீண்ட சோகசுமை முள்ளாய் குத்த
நீள் வலிகள் என்னையே துரத்த
வேதனை வடுக்கள் நெஞ்சை தாக்க
போதனை தினமும் அமைதி காக்க

உறவுகள் தொல்லை உருப்படா முயற்சி
தரவுகள் சொல்லி தருவதோர் பயிற்சி
சுட்டிக் காட்டி சொல்லும் உத்தி
தட்டிக் கழித்து கேட்காத புத்தி

Nada Mohan
Author: Nada Mohan