புனிதா கரன் UK

தைப் பொங்கல்
————————-

தமிழர் திருநாளாம்
தை திங்களிலே//
சாதிமத பேதமின்றி
களித்திடுவோம் அந்நாளை//
உலகிக்கே உணவளிக்கும்
உழவனுக்கு உதவிடும்//
கதிரவனைப் போற்றி
கால்நடையை வணங்கி//
நன்றி கூறிடும்
நலமிகு பெருநாளே//
பழையன கழிதலும்
புதியன புகுதலுமென//
எம்மில் உள்ள
தீயகுணங்களை அகற்றி//
நற்குணங்களை வளர்த்திடல்
சாலச் சிறப்பே//
தை பிறந்தால்
வழி பிறக்குமென//
நம்பிக்கை வளர்த்திட
நல்வாழ்வும் மலருமே//
வள்ளுவன் போற்றிய
பெருமைமிகு தொழிலாம்//
உழவு தொழில்தனை
உளமகிழ்ந்து போற்றி//
பண்பாட்டு விழுமியமும்
பாரம்பரிய சிறப்பும்//
பொங்கி மகிழ்ந்திடவே
பொங்கலைக் கொண்டாடுவோம்/

நன்றி
புனிதா கரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading