நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பூக்களின் புதுவசந்தம்

ஈர்ப்பில் கவரும்
ஈகை நிறைக்கும்
மலர்களின் சேவை
மதிப்புறு உலகே

சித்திரை மகளை
சிரிப்புடன் ஏற்கும்
வண்ணக் கோர்ப்பில்
வசப்பட வைக்கும்
அழகுறு மலர்களின்
அடைக்கலம் நாமே

பூத்தே பாரிற்கு
பொட்டினைச் சூட்டும்
புதுமை மலர்ச்சியில்
புவியே சொர்க்கும்

மனிதத்தின் தேவைக்கு
மாண்புகள் சுட்டும்
அழகுமலர்கள் போல
அணியம் உண்டா
பாரிற்கு பலவகை
வண்ணத்தை ஊட்டும்
அழகுக்கு நிகராய்
அற்புதம் உண்டா
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan