பூக்களின் புதுவசந்தம்

ஈர்ப்பில் கவரும்
ஈகை நிறைக்கும்
மலர்களின் சேவை
மதிப்புறு உலகே

சித்திரை மகளை
சிரிப்புடன் ஏற்கும்
வண்ணக் கோர்ப்பில்
வசப்பட வைக்கும்
அழகுறு மலர்களின்
அடைக்கலம் நாமே

பூத்தே பாரிற்கு
பொட்டினைச் சூட்டும்
புதுமை மலர்ச்சியில்
புவியே சொர்க்கும்

மனிதத்தின் தேவைக்கு
மாண்புகள் சுட்டும்
அழகுமலர்கள் போல
அணியம் உண்டா
பாரிற்கு பலவகை
வண்ணத்தை ஊட்டும்
அழகுக்கு நிகராய்
அற்புதம் உண்டா
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading