நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பூக்களின் புது வசந்தம்

இயற்கையின் படையல்
செயற்கையில் உன்னதம்….
வியப்பினில் விழிகள்அகல
பூக்களில் மொய்க்கும் மனங்களே….
புதுப்புது வசந்தம் பூரிப்பில்
உச்சம்…
பூக்கும் அழகு வீசும் வாசம்
காக்கும் கடவுள் எழுதிய விதி…
இறைவனின் சுயதேவையும் பூக்களே…
பூவையர் நாடலும் பூக்களே…..
இன்றைய விடியலில் அழகோடுமலர்ந்து…
மலர்ந்த நொடியில் காலனாக மாறும் மனிதமே……
விரல்களால் நுள்ளி எடுத்து
புதுவசந்தம் அழிக்கும் செயல் தகுமா…..பூக்கும் கணங்கள் அழியாத விதியை எழுத வேண்டியதை இறைவன்
மறந்தாரோ….
ரசிக்கும் மனங்கள் வசிக்கும் காலம்வரை….அழகும் வாசமும் அழியும் விதியே….பூக்களின் புது வசந்தம் சொல்லில் மட்டுமே…
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan