நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

பூத்தது மேதினம்

ரஜனி அன்ரன் ( B.A ) “ பூத்தது மேதினம் “ 01.05.2025

மேதினி தன்னில் மேதினம்
உழைப்பவர் மேன்மைக்கு உரமானதினம்
உழைக்கும் வர்க்கம் மேம்பட
உழைப்பாளிகளும் மகிழ்வுற
உதயமானதே மே ஒன்றில் மேதினமாக !

உலகையே பசியாற்றும் உழைப்பாளரை
உன்னத மானத்தைக் காக்கும் தொழிலாளரை
உலகின் சுத்தத்தைப் பேணிடும் பாட்டாளிகளை
உழைத்துக் களைத்திடும் உயர்வானவரை
உன்னதமாக்க பூத்தது மேதினியில் மேதினம் !

உலகின் படைப்புக்களை எல்லாம்
உதிரம் என்ற உளியால் செதுக்கிய சிற்பிகளுக்காய்
உதிரத்தை வியர்வையாக்கி
உன்னத மானிட முன்னேற்றத்திற்காய்
உழைத்திடும் உழைப்பாளிகளுக்காய்
உன்னதமாய் பூத்த தினமே மேதினம்
உழைப்பாளிகள் தியாகத்தைப் போற்றுவோம்
உணர்வுதனை மதித்திடுவோம் !