பெண் 67

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-08-2025

தனக்கென வாழாமல்,
தான் பிறர்க்கென வாழ்பவள்
கண்ணீரைக் காதலித்து,
கனவுகளைச் சுவாசித்து

உறவுகளுக்கு உண்மையாய்
உயரிய பண்பை மேலாய்
சுற்றாடலுள்ளோரின்
சுகதுக்கம் விசாரித்து

வலிகளை வலிமையாக்கி,
வாழ்கிறாள் பெண்
முடிவில்லா பெரு அதிசயம்,
முடியும் வரை உதவுகிறாள்

புதிய உலகைப் படைக்க
புதிய பாதை வகுக்க
பல புதுமை விதைக்க
கால ஓட்டத்தில் நதியாய் இவளும்.

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading