” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பெண் 67

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-08-2025

தனக்கென வாழாமல்,
தான் பிறர்க்கென வாழ்பவள்
கண்ணீரைக் காதலித்து,
கனவுகளைச் சுவாசித்து

உறவுகளுக்கு உண்மையாய்
உயரிய பண்பை மேலாய்
சுற்றாடலுள்ளோரின்
சுகதுக்கம் விசாரித்து

வலிகளை வலிமையாக்கி,
வாழ்கிறாள் பெண்
முடிவில்லா பெரு அதிசயம்,
முடியும் வரை உதவுகிறாள்

புதிய உலகைப் படைக்க
புதிய பாதை வகுக்க
பல புதுமை விதைக்க
கால ஓட்டத்தில் நதியாய் இவளும்.

Jeba Sri
Author: Jeba Sri