நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)…பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026

மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும் நினைவுநாள் அல்ல
சொற்களால் விபரிக்க முடியாதநாள்
உணர்வின் வலிகளை உணர்த்திடும்நாள்
வலிகளின் வரலாற்றுப் பதிவேடிது !

கண்ணீரும் செந்நீரும் ஆறாகப்பாய
உண்ணீரும் இன்றித் தவித்தஉறவுகளை
நந்திக்கடலே சாட்சி சொல்லும்
நடந்தது என்னவென்று நறுக்கென உரைக்கும் !

எரியும் நினைவுகளின் சாட்சியாக
சொல்லும் கதைகளோ ஆயிரமாயிரம்
கதறிய குரல்கள் காற்றில்கரைய
சிதறிய உடல்கள் மண்ணில்புதைய
உறவுகளின்றி அநாதைகளாகி
உயிரைத்தவிர இழந்தோம் அனைத்தையும்
சிதறியது உயிர்கள் மட்டுமல்ல
எம்வாழ்வின் கனவுகளும் வேர்களுமே
பெருவலி சுமந்த பேரிடர்இதுவே !