பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

“பேராசை”

நேவிஸ் பிலிப் கவி இல (509)

நானும் என்றால் அது ஆசை
நான் மட்டும் என்றால்
அது பேராசை

நான் என்ற ஆணவமும்
அவனா என்ற பொறாமையும்
கொண்ட மனிதன் நிம்மதியாய்
என்றும் வாழ்ந்ததில்லை

உலகை வளைக்க ஆசை கொண்டு
பேராசை என்ற சேற்றில் விழுந்து
தம்மையே இழந்து
பெரும் நட்டம் அடைகின்றார்

மதியிழந்து மயக்கம் கொண்டு
இருப்பதை விட்டு
பறப்பதற்கு ஆசை கொண்டால்
அனலிலிட்ட புழுவாய்
துடிக்கும் நிலை வந்திடலாம்

போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்தென்று
சீராய் வாழ்ந்து சிக்கனம் பழகின்
இருப்பதை வைத்து
இன்பமாய் வாழ்ந்திடலாம்
நன்றி,,,,,,,,,

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading