” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ப..வை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு264
“அழகு”
காளை பருவத்து தாகம்
கன்னியர் மேல் எழும் மோகம்
வேளை விடும் பள்ளி நேரம்
வீதியில் தாவும் என் காலும்.

கட்டழகு கரு மேனி
கரைகளில் நீள் முடி தாவி
வட்ட பிறை முகம் காவி
வதனம் நிறை குட பாணி..

கண்ணில் அவளது கோலம்
காணாத வேளையும் ஜாலம்
எண்ணி மனம் நிதம் ஏங்கும்
இதயத் துடிப்பும் பேர் கூறும்.

ஓன்றாய் பணி செய்ய காலம்
ஒன்றிய தால் காதல் வேகம்
நன்றாய் அவ ளூடும் ஏறி
நகமும் சதையுமாய் தேறி

வீறான காதலுக் ஊறு
விளைத்து போர்புல பேர்வு
ஆறாத மனக்கண் துயரம்
ஆற்றியது வந்த வதிவு உரிமம்

அழகினை நிதம் ஒன்றி பருகி
ஆனந்த வெள்ளத்தில் முழுகி
பழுத்தது தேகத்தில் முதுமை
பாசம் மகளில் தாவி முழுமை.

ப.வை.ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan