” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 211
21/02/2023 செவ்வாய்
“சாதனை”
…………….
செய்யும் தொழில் சிறப்பானால்
சேர்வது என்றும் சாதனையே!
மெய்யும் மனமும் ஒன்றானால்
மேன்மை தருவது சாதனையே!

உண்மையும் உழைப்பும் உறவாடின்
உயர்வாய் கிடைப்பது சாதனையே!
கண்ணெனக் கடமை செய்திட்டால்
கனிவாய் கிடைத்திடும் சாதனையே!

வேதனை மறந்து வேலை செய்யின்
வெகுமதி யாவதும் சாதனையே!
சோதனை வருகினும் சோராது
செயற்படு-வந்திடும் சாதனையே!

உள்ளத்தில் கள்ளம் அகன்றிட்டால்
உயர்வாய் கிடைத்திடும் சாதனையே!
பள்ளத்தில் வீழ்ந்து எழுந்தோர்க்கும்
பரிசாய் கிடைப்பதும் சாதனையே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan