” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 261
16/04/2024 செவ்வாய்
“பெருமை”
—————
உயிரைச் சுமந்திடும் கருவை,
உளமாய் போற்றுதல் பெருமை!
உயிரினும் மேலாமெம் தமிழை,
உயிராய்ச் சுமப்பதே பெருமை!

உலகத் திருமுறையின் மேன்மை,
உருவாக்கியது தமிழன் திறமை!
விலக வொண்ணா இவ்வருமை,
வியந்து போற்றுவதில் பெருமை!

ஐம்பெரும் காப்பிய மேன்மை,
அறிந்தால் கிடைக்கும் பெருமை!
நம்பெரும் இலக்கிய அருமை,
நாடெல்லாம் பரவிடப் பெருமை!

உழுதுண்டு வாழும் உணர்வை,
உலகே உணர்வது பெருமை!
தொழுதுண்டு வாழும் மடைமை!
தொடர்ந்திட மங்கிடும் பெருமை!

கள்ளின் நிறமது வெண்மை!
கறவையின் பாலுமத் தன்மை!
புள்ளின அன்னத்தின் திறமை,
புகுந்திடின், சேருமே பெருமை!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan