மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
21/03/2023 செவ்வாய்

“விடியல்”
————
இரவு ஒன்று கழியும்!
இனிய காலை விடியும்!
உளவு பார்த்த நிலவும்,
உரிய ஓய்வு காணும்!

அலகு நீண்ட குருவி,
அமரும் மலரை மருவி!
விலகி நழுவும் தேனி,
விரையும் மஞ்சள் பூசி!

கண்ணை உரசிக் கமலம்
கைகள் நீட்டி அமரும்!
அண்ணல் வருகை புரியும்!
அவனி எல்லாம் மகிழும்!

விடியல் வந்து போகும்!
விளக்கும் எரிந்து தீரும்!
குடிகள் செய்த பாவம்,
குறைவே இன்றி நீளும்!

என்று எமக்கு விடியலென,
ஏங்கும் இதயம் துவளும்!
இன்று அல்ல நாளையென,
இழுத்தே காலம் தவழும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading