” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம். சிந்தும் சந்திப்பு
வாரம்: 204
13/12/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
சொல்லாய் ஒரு வார்த்தை!
—————————————
முல்லை வனத்தருகே
முட்கிழுவை தைக்கயிலே
பல்லால் பிடித்திழுத்து
பத்தியமும் சொன்னவளே!

வில்லை வளைத்திரு கண்
விழி அம்பு எய்கையிலே
சொல்லால் அடித்த அடி
சொர்ப்பனமாய் போனதடி!

எல்லை வேலியால் நீ
எட்டிப் பார்க்கையிலே
வல்லை வெளி போலே
வளருதடி அவன் கனவு!

வெள்ளை நிறத்தவளே
வெண்மதியாய் ஆனவளே
கிள்ளைக் குணத்தவளே
கிறங்குதடி ஓர் மனசு!

மெல்ல உன் வாய் திறந்து
மை விழியே நீ பேசு
கல்லை உரித்தேனு முன்
கையைப் பிடித் திடுவான்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan