28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மதிமகன்
சந்தம். சிந்தும் சந்திப்பு
வாரம்: 204
13/12/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
சொல்லாய் ஒரு வார்த்தை!
—————————————
முல்லை வனத்தருகே
முட்கிழுவை தைக்கயிலே
பல்லால் பிடித்திழுத்து
பத்தியமும் சொன்னவளே!
வில்லை வளைத்திரு கண்
விழி அம்பு எய்கையிலே
சொல்லால் அடித்த அடி
சொர்ப்பனமாய் போனதடி!
எல்லை வேலியால் நீ
எட்டிப் பார்க்கையிலே
வல்லை வெளி போலே
வளருதடி அவன் கனவு!
வெள்ளை நிறத்தவளே
வெண்மதியாய் ஆனவளே
கிள்ளைக் குணத்தவளே
கிறங்குதடி ஓர் மனசு!
மெல்ல உன் வாய் திறந்து
மை விழியே நீ பேசு
கல்லை உரித்தேனு முன்
கையைப் பிடித் திடுவான்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...