பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மதிமகன்

சந்தம். சிந்தும் சந்திப்பு
வாரம்: 204
13/12/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
சொல்லாய் ஒரு வார்த்தை!
—————————————
முல்லை வனத்தருகே
முட்கிழுவை தைக்கயிலே
பல்லால் பிடித்திழுத்து
பத்தியமும் சொன்னவளே!

வில்லை வளைத்திரு கண்
விழி அம்பு எய்கையிலே
சொல்லால் அடித்த அடி
சொர்ப்பனமாய் போனதடி!

எல்லை வேலியால் நீ
எட்டிப் பார்க்கையிலே
வல்லை வெளி போலே
வளருதடி அவன் கனவு!

வெள்ளை நிறத்தவளே
வெண்மதியாய் ஆனவளே
கிள்ளைக் குணத்தவளே
கிறங்குதடி ஓர் மனசு!

மெல்ல உன் வாய் திறந்து
மை விழியே நீ பேசு
கல்லை உரித்தேனு முன்
கையைப் பிடித் திடுவான்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading