திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 195
11/10/2022 செவ்வாய்

“ஒன்றுபட்டு…..”
————————
ஒன்று பட்டு நிற்போம்என்றோம்!
ஒரே குரலில் கேட்போம் என்றோம்!
இரண்டு பட்டே என்றும் நின்றீர்!
இரண்டும் கெட்டான் ஆக்கி விட்டீர்!

வானில் பறக்கும்மழைக்கண்ணி
வடிவ அமைப்பை நீயும் கவனி
தேனில் தினம் நனையும் தேனீ
தேறும் நிலை பாரும் உன்னி!

அழகில் காக்கை கறுப்புத் தான்
ஆனால் ஒற்றுமை சிறப்புத் தான்!
வலையில் சிக்கிய புறாவைத் தான்
வாழ வைத்ததும் ஒன்றுமை தான்!

எறும்பு மற்றும் கறை யானையும்
எழிலாய் காப்பது ஒற்றுமை தான்!
இரவில் மலரும் மல்லிகையும்
எழிலாய் தெரிவது கூட்டால் தான்!

அலைகடல் ஓர அடம்பன் செடியும்
அடர்ந்து நிற்பதில் ஓர் மிடுக்கு!
நிலையா உலகில் நீயிதை உணர்ந்து
நிம்மதி காண்பது உன் பொறுப்பு!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading