” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 208
31/01/2023 செவ்வாய்
“விருப்பு”
ஏழை பணக்காரப் பிரிவு வேண்டாம்!
எதற்கும் குதர்க்கம் பேச வேண்டாம்!
கூழானாலும் பகிராது விட வேண்டாம்!
கும்பிட்ட. கையைத் தட்ட வேண்டாம்!

நாளை பார்ப்போம் என்று வேண்டாம்!
நல்லன செய்ய நாளேதும் வேண்டாம்!
வேளை வரட்டுமென விலக வேண்டாம்!
வல்லமை காட்டி வதைக்க வேண்டாம்!

முள்ளை முள்ளால் எதிர்க்க வேண்டாம்!
முதியோர் சொல்வதை மீற வேண்டாம்!
வெளளை தானென எண்ண வேண்டாம்!
விக்ஷப் பாம்புகளை நம்ப வேண்டாம்!

அள்ளி அணைப்போரை அணுக வேண்டாம்!
அஞ்சுவதை அருகில் வைக்க வேண்டாம்!
சுள்ளி தானே என சொறிய வேண்டாம்!
சுய விளம்பரம் எதிலும் வேண்டாம்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan