” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 248
09/01/2024 செவ்வாய்
வசந்தத்தில் ஓர் நாள்..
—————————
ஊரெல்லாம் பூச் சொரிய…
உளமெல்லாம் கிளு கிளுக்க..
பாரெல்லாம் கல கலக்க…
பச்சைநிற பாய் விரிக்க!

கார்கொண்ட முகில் அகல..
கண கணப்பாய் சூடேற..
வேர்கொண்ட விதை பிளக்க..
வெடித்திரண் டிலையும் விட!

பூக்கரசி கண் விழிக்க…
புதிதுடுத்து உலாவும் வர….
பூந்தென்றல் மருவிச் செல்ல..
புள்ளினமும் இசை மீட்க!

வண்டினங்கள் மதி மயங்க..
வானரங்கள் கூச்ச லிட…
கெண்டைமீன் துள்ளி விழ..
கேழ்வரகுக் கதிர் முறிய!

குஞ்சரங்கள் குழல் ஊத..
குளநண்டு குடை பிடிக்க..
வஞ்சியென வசந்த மக(ள்)..
வந்துதித்தாள் வளம் காண!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan