நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 255
05/03/2024 செவ்வாய்
“பகலவன்”
—————-
உச்சத்தி லெங்கோ உறைபவனே!
ஊர்மனை எங்கும் ஒளிர்பவனே!
கச்சிதமா யெமைக் காப்பவனே!
காலமெலா முனை வணங்குவனே!

முச்சை இல்லா முகிலினங்கள்,
முன்னே நின்று மறைத்தாலும்..
நிச்சயம் தினமும் உதித்திடுவாய்..
நிம்மதி எமக்குத் தந்திடுவாய்!

பச்சைப் பசேலென பயிர்வளர..
பார்த்துப் பார்த்து உதவிடுவாய்!
அச்சம் மிகுந்த குளிர்போக்கி..
அகிலம் மகிழச் செய்திடுவாய்!

உச்சி மண்டை வெடிக்குதென..
உன்னைச் சிலபேர் வைதாலும்,
அச்சு இன்றியே உனைச்சுற்றும்..
அன்னை அவளுக் குதவிடுவாய்!

பச்சைக் குழந்தை-படுத்தபடி..
பார்த்து உன்னை வியந்திடுமே!
கொச்சை தமிழில் உனைப்பாடி..
குவலயம் களிக்க வைத்திடுமே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan