” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 258
26/03/2024 செவ்வாய்
“மாறாதோ மோகம்।!”
——————————-
வாழ்வினில் வந்திடும் மோகம்,
வளர்த்திடில் தந்திடும் சோகம்!
ஆக்கையில் அதனது தாக்கம்,
அளவிட முடியாமற் போகும்!

உணவில் உண்டாகும் மோகம்,
உணர்த்திடும் உடல்நிறை ஏற்றம்!
பணமதில் அளவில்லா நாட்டம்!
பலப்பல செயல்செயத் தூண்டும்!

பதவியாம் பேயதன் மோகம்,
புரிந்திடும் பற்பல துரோகம்!
உதவியைத் தூற்றிடத் தூண்டும்!
உட்பகை எல்லையைத் தாண்டும்!

போதை மருந்தின் மோகம்,
புரிந்திடும் தினமது நாசம்!
வாதை தருவதில் மோசம்!
வளரும் இளமைக்குத் தோஷம்!

வெளிநாடு செல்லும் மோகம்,
வெறுங்கை உன்கை ஆகும்!
களியாட்டம் என்றொரு மோகம்,
கவனம்போயின் கையதை மீறும்!

மோகம் தந்திடும்-என்றும்
மொத்த அழிவதே என்று,
நாமும் உணர்ந்து-என்றும்,
நல்லது செய்வோம் நன்று!

மாறாதோ பேய்போலும் மோகம்!
மானிடத்தை அழித்திடும் ரோகம்!
போராடு மனிதா-நிற்காது காலம்!
பொறுப்பது தவறின், மாறிடும் கோலம்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan