நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

வேள்வி

விரும்பியதை அர்ப்பணித்தலே வேள்வி

ஆளாளுக்கிங்கே சொன்னார் சேதி
அதையிதை அடியிட்டுக்
காட்டி

தோளுயர்த்தி நானும் சொல்கின்றேன்
வாளுயர்தாதே விரும்பிக் கேளும்

அக்கினி வேள்வியே
சிவ வேள்வி
அதனை ஆற்றுவர்
அவிப்பொருள் தூவி
மந்திரங்களைச் சிதைக்காது
சித்தத்தால் கூவி

எழும்பும் புகைக்குப்
பலியாகும் கிருமிகள்
அழும் மனமும்
குணமாகி
சுனையாகும்

அண்டிய பகுதிகளும்
நஞ்சை விலக்கும்
புண்ணியச் செயல்கள்
புலத்தில் நிறையும்
எண்ணிய எண்ணங்கள்
இயல்பாய் நடக்கும்

அறிவியலும் நிறுவுகின்றது
வேள்விப் பயனை

கேலிக்குரியதாய் ஆக்காதீர்
வேள்விக் குழியை
காவித் திரியாதீர்
கயவராய்
உயிர்ப்பலியை

நாசுவைக்க விரும்பின்
நறுக்கித் தின்னும் உம்சதையை
கூசும் செயலைச்
நெய்வதற்குச் செய்வதற்கு
கூட்டி வராதீர் கொள்கைகளை

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan