” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பள்ளிப் பருவம்

உதயம் கண்ட பருவம்
உள்ளத்தாலேயே உறவாடிய பருவம்

ஆசிரியத்துள் அடைக்கலமான பருவம்
அகரமுதலாய் அறிவன திரட்டிய பருவம்
அடைவினைப் பொருத்திய பருவம்
அந்தரங்கசுத்தி மிளிர்ந்த பருவம்

நினைத்தாலே இனிக்கும் பருவம்
நிம்மதியைச் சுவைத்த பருவம்
குணத்தாலே நிறைந்த பருவம்
குறும்புடன் சுழன்ற பருவம்
குதூகலத்தையே சுமந்த பருவம்

சீருடை அணிந்த பருவம்
சித்திகள் எய்திய பருவம்
தோழமையால் குளித்த பருவம்
தொண்டுகளால் களித்த பருவம்
புத்தகச்சுமையால் பூத்த பருவம்
பூத்தூக்கம் புகுந்த பருவம்

சாதிமதம் அணுகாப் பருவம்
சங்கடங்கள் அழுத்தாப் பருவம்
மீண்டும் வராப் பருவம்
நினைவுச்சேமிப்பில் நிலைத்த பருவம்
அதுவே யெந்தன் பள்ளிப்பருவம்.

மனோகரி. ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan