கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பள்ளிப் பருவம்

உதயம் கண்ட பருவம்
உள்ளத்தாலேயே உறவாடிய பருவம்

ஆசிரியத்துள் அடைக்கலமான பருவம்
அகரமுதலாய் அறிவன திரட்டிய பருவம்
அடைவினைப் பொருத்திய பருவம்
அந்தரங்கசுத்தி மிளிர்ந்த பருவம்

நினைத்தாலே இனிக்கும் பருவம்
நிம்மதியைச் சுவைத்த பருவம்
குணத்தாலே நிறைந்த பருவம்
குறும்புடன் சுழன்ற பருவம்
குதூகலத்தையே சுமந்த பருவம்

சீருடை அணிந்த பருவம்
சித்திகள் எய்திய பருவம்
தோழமையால் குளித்த பருவம்
தொண்டுகளால் களித்த பருவம்
புத்தகச்சுமையால் பூத்த பருவம்
பூத்தூக்கம் புகுந்த பருவம்

சாதிமதம் அணுகாப் பருவம்
சங்கடங்கள் அழுத்தாப் பருவம்
மீண்டும் வராப் பருவம்
நினைவுச்சேமிப்பில் நிலைத்த பருவம்
அதுவே யெந்தன் பள்ளிப்பருவம்.

மனோகரி. ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading