நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

அத்திவாரம்

கட்டத்தைத் தாங்கி நிற்பது அத்திவாரம்
கட்டுமானப் பணிக்கும் அதுவே ஆதாரம்
அதனது கட்டுக்கெட்டால் கட்டடம் காணும் சேதாரம்

அழகான கட்டடம்
அமைத்தென்ன இலாபம்
அத்திவார உறுதிவிட்டு
பாழாகுமே கட்டடம் நீளாயுள் கெட்டு
நிலத்தை தொட்டு

வெள்ளம் மழை
சூறாவளி சுனாமி
அள்ளிக்கொண்டும் போகும்
ஆட்களுடன் கட்டத்தை
தள்ளிச் சரித்தும்
சங்காரம் நிகழ்த்தும்

அத்திவார உறுதியே
கட்டட ஆயுளைக் கூட்டும்
பத்திர உணர்வைப்
பயமுறுத்தாது தீட்டும்

தோண்டுவார் அத்திவாரப் பள்ளம்
தோதான நாளில் நிலத்தில்
வேண்டியே இறையை முறையாய்
முனைப்புடன் வைப்பார் முதற்கல்லை
இதனையே அழைப்பர் அடிக்கல்லென

செயலில் நிறைவு காண
உரியவர் வைப்பார் முதற்கல்
செம்மை யணிந்து நிமிர்ந்து
கட்டமும் தோன்றும் கண்முன்னே

செய்தியில் செருகுண்டு
சேகரிக்க
அமைச்சரும் வைப்பார் அடிக்கல்
சொட்டும் வளராக் கட்டடம்
சோகத்தையே துப்பும் அதன்பின்னே

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan