சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

கவியழகு

கற்பனையே உயிர்மூச்சு
கவிக்கெனவே ஆச்சு
கவியழகு தருமதன் ஒப்பனை
கருவும் காணுமதனால் விற்பனை

பொய்மைப் புனைவும் செய்யும்
நெய்யும் கவிதைக் கழகு
தொய்வு அறுத்து நுகர
எய்வர் இதனைக் கவிஞர்

எதுகை மோனைச் சந்தம்
உவமை தற்குறிப்பேற்றவணிவ கைப் பந்தம்
கவியது கொள்ளின் சொந்தம்
காமுற்று மனமருந்த முந்தும்
காவிடக் கரங்கள் தாங்கும்
கவியும் எங்கும் சிந்தும்

சொக்க வைக்கும் சொல்லாட்சி
கக்கி நிற்பதும் கவிக்கழகு
நக்கி நயக்கவுமது இலகு
சிக்கி நிற்குமதில் உலகு

கவியழகு காணவேண்டுமா
காணுங்கள் கம்பனை

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan