கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன

பாட்டி

வெள்ளை நிறமேனி
வெள்ளாடை பூண்ட கூனி
வெற்றிலைச் சிவப்பேற்றிச் சிரித்தாளே
வெள்ளை யுள்ளம் காட்டி

பொல்லை யூன்றி நடந்தபோதும் போகாது நின்றதே அவள்திடம்
பேசுவாய்க்களும் அடங்கும்விதம்

கொள்ளை யழகு கொண்ட வளாமவள் இளமையில்
கொடுத்தானாம் இறைவனும் இனிய துணைநலம்
துள்ளல் நடைநடந்து பின்கொய்ய மசைய
இடைக்கிழ்
நெகிழ்ந்து பின்னலாடப்
பாட்டி நடப்பாளாம்
துள்ளும் உள்ளத்தை அடக்கியே அன்னியரும் கடப்பாராம்
அத்துமீறின் கொட்டுவாளாம் காரத்தைப் பாட்டி
எள்ளும் வகையில்லா ஏற்றம் கொண்ட வாழ்வே
அவளது
என்முகம் பார்க்கில் தெரிவாளாம் பாட்டி

நாற்சார் முற்றத்திலே தன்னை நடுவிருத்தி
சுற்றிவரக் காற்றெட்ட
எம்மை யமர்த்திப்
பற்றுடனே பாட்டி யளித்தாளே கூழலப்பம்
நேற்றுப் போலுள்ளதே நிகழ்ந்த யாவும்

சூடுதாங்கி விரலிட்டு இறால்நண்டு பலாக்கொட்டை கூழிலெடுத்துச் சுவைத்த காலமும் வருமோ
கூடாயி ருந்துகாத்து தகர்ந்து போன
நாற்சார் வீடுமெங்கும் முளைக்குமோ மீண்டும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading