மறக்கத் தகுமா மே பதினெட்டு..

வசந்தா ஜெகதீசன்
மறக்கத்தகுமா மே பதினெட்டு…

வெட்டவெளி மையானம்
வெறுமையான சுடுகாடு
அவலக்குரல்கள் ஆவிபேரொலிகள்
நிஜமான இனஅழிப்பு
நிர்க்கதியான தமிழினம்
பூண்டோடு அழித்திட்ட மே 18
இதயரணம் காயாது
மரணித்த வேதனையில்
மாண்டு துடிக்கிறது
மனிதநேயக்கதவுகள்
இருண்ட பேரவலம்
மயான பூமியாய்
முள்ளிவாய்க்கால்
மறக்கத்தகுமா மே18
ஈழத்தின் வேரிலே
இனஅழிப்புக்கோரம்
குருதி ரணமாய்
குற்றுயிர் வதையாய்
கட்டுண்டு மாண்ட
காயவலிகள்
மறக்கத்தகுமா மே18
மனிதமே எங்கே
மாண்டுபோனாய்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading