” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மழலைக்குள் மலர்கின்றாள்..

மழலைக்குள் மலர்கின்றாள்………

அவள் கிள்ளை மொழி அமிழ்து
கீதமென இசைந்தசையும் செழிப்பு
வித்தைகளை விளையாடும் விரல்கள்
வேருக்குள் ஒளி பாய்ச்சும் அழைப்பு

கால்களுக்குள் கரைந்தெழுதும் இழைவு
கனிவோடு அவள் பாச மொழிவு
அதட்டித்தான் அடி பணிய வைப்பாள்
அவள் செருக்கினிலே என் பாட்டி ஒளிர்வாள்

குழைந்தசையும் தமிழ் சொரியும் தேனை
அள்ளிப் பருகி விட அவளேந்தும் முத்தம்
எப்படித்தான் இத்தனை சொல் படித்தாள்
என ஏங்க கேள்விகளால் துளைப்பாள்

அழகியிவள் அருந்தவத்தின்சிற்பம்
முத்துப்பல்லழகில் முழு உலகும் அடிமை
பெருந்தவத்தின் பயனாகும் மழலை
நம் கைகளுக்குள் நிறைவதுவே அழகு

இரா விஜயகௌரி

Nada Mohan
Author: Nada Mohan