” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு “

ரஜனி அன்ரன் ( B.A) மாசற்ற உலகே…. 09.04.2026

ஆரோக்கியமென்பது அழகிய பயணம்
சுற்றுச்சூழல் சுவாசிக்கும் காற்று
சிந்திடும் எண்ணம் உண்ணிடும்உணவு
அத்தனையும் தூய்மையாய் இருந்தால்
நோயற்ற வாழ்வும் கிட்டும்
மாசற்ற உலகையும் கட்டியெழுப்பலாம் !

கழிவுகள் கொட்டாத நதிகளும்
கலப்படம் இல்லா உணவுகளும்
நெகிழிகள் இல்லா வாழ்வும்
நச்சுப்புகை இல்லாக் காற்றும்
நோயற்ற வாழ்விற்கு உறுதுணை
மாசற்ற உலகிற்கு மாண்பு
வருங்காலத் தலைமுறைக்கு இதுவேபரிசு !

காற்றினில் நஞ்சு நீரினிற்கழிவு
இதுவே மனிதகுலத்தின் ஆரோக்கிய அழிவு
ஆரோக்கியமும் பசுமையும் அனைவருக்கும் கிடைக்கட்டும்
மாசற்ற உலகைப் படைப்போம்
நோயற்ற வாழ்வினை அடைவோம்
மாசற்ற வாழ்வே நோயற்ற வாழ்வின் திறவுகோல் !