மாற்றத்தின் ஒளியாய்

நகுலா சிவநாதன்
மாற்றத்தின் ஒளியாய்

மாற்றத்தின் ஒளியாய் மண்ணின் விடியல்
மலர்கின்ற இன்நாள் வாழ்வின் பொன்னாள்
மாண்புறும் மக்களின் வாழ்க்கை ஓங்கிட
தேங்கிய இடர்கள் நீக்கட்டும் என்றும்

பூமியிலே புதுவிடியல் பூக்கட்டும் என்றும்
சாமிதான் அதற்கு வரம்தந்து அருளட்டும்
தைமாதம் தளிர்கட்டும் தங்குதடை அகலட்டும்
எங்கும் புதுமணம் பரவட்டும்
ஏற்றங்கள் சீராக பெருகட்டும்

தைமகள் வருகிறாள் தரணியில் பூக்கிறாள்
மெய்தனில் ஞானம் கல்வி ஓங்கட்டும்
செய்யும் காரியம் திறம்பட
செல்லும் இடங்களிள் நெல்லும் விளையட்டும்

நகுலா சிவநாதன் 1837

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading