இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மாற்றம் ஒன்றே!

மாற்றம் ஒன்றே!

ஒன்றே இறைவன் ஒருவனே பரமன்
நன்றே உரைப்போம் நமக்குள் என்றும்
மாற்றம் வாழ்வில் மகிமை தரட்டும்
ஏற்றம் அதுவும் எழிலாய் உயரட்டும்

வாழ்க்கை மாற்றம் வரம்பு மீறி
வீழ்ச்சி இதனால் வீம்பும் பலவாய்
ஆட்சி மாற்றம் அகிலத்தில் இன்று
அதனால் அவலம் உலகத்திலின்று

சூழ்ச்சி அரசியல் சுகத்தை இழக்குது
காட்சி இங்கு கனிமம் பறித்திட
தாச்சி விளையாட்டு சரித்திரமாய் இன்று
பாச்சும் நீரும் மாற்றம் காணுதே!

பாமுக மாற்றம் பன்முகத்தோற்றம்
நாமதை பார்க்க நன்றே ஒளிருது
மாற்றம் வேண்டும் மங்கா வாழ்வில்
ஆற்றும் கடமை அறிந்தே உயர்வாய்

நகுலா சிவநாதன் 1799

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading