” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாற்றம் ஒன்றே

இரா.விஜயகௌரி
மாற்றம் ஒன்றே மாறாதது
மகிழ்வுடன் ஏற்றலும்
எதிர்வினை ஆற்றலும்
வினைத்திறன் விளைச்சலாய்
மடை திறந்திட மொழிதலும்
காலச்சக்கர சுழற்சியின் தொடுப்பில்
ஆற்றலை அறிவினை
சீர்பட செப்பனிட்டே கொடுத்தலும்
வெற்றியின் மந்திரம்
விளை பயிரதன் தந்திரம்

வீழ்ந்தவன் எழுந்தால் -அவன்
வென்றிட உழைப்பான்
தடைகளைத் தகர்த்து
தனித்துவ உழைப்பினில்
சாதனைப்படையலை நாளும்
விருந்தெனக் கொடுப்பான்
உலகினை உணர்ந்தே
உயர்ந்திட தொடர்வான்

மாற்றம் ஒன்றே- மாறா நிலையினில்
மகிழ்வொடு ஏற்றலும்
முனைப்பொடு இழைதலிம்
வென்றவர் சுவடுகள் நிதம்
உரைத்தெழும் பதிவுகள்

Nada Mohan
Author: Nada Mohan