மாற்றம்

வஜிதா முஹம்மட்்

வான் பூமி மாற்றவில்லை
அதற்குள்ளே
வாழ்கின்ற மானிடம்
மாற்றம் கண்டானே இதற்குள்ளே

நவீனம் என்கின்ற புதுஏடடி
நாள்தோறும் அழிவுகள் பாரடி
நாட்டுக்கு நாடு பெரிடி
நன்மை தீமை இதனடி

அறியாமை அகற்றவே பல
இறைதூதர் வந்தார் மண்ணிலே
அணியாயம் மதம் கொண்டு
மாற்றம் கொண்டது மனிதம்
மண்ணிலே

வாழ்வது எத்தனை காலம்
மானிடம் மறந்தது கோலம்
மண்ணுக்கு இரையாகும் முன்பே
மனிதம் கொண்டு மாற்றம்
காண்பாயா

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading