” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“மா மருந்து”

நேவிஸ் பிலிப் கவி இல(424”

கண் கவர் அழகு
மனதை கவரும் புன்னகை
மென்னகை ஒன்றே போதுமே
பொன்னகை ஒன்றும் வேண்டாமே

வலிமை காக்கும் ஒரே பொருள்
அன்பைக் காட்டும் புன்னகை
அனைத்தையும் கையாள
கற்றுத் தரும் தரமான கலை

ஒரு சிறு புன்னகை
எண்ணற்ற நன்மை தரும்
எல்லா மொழிகளிலும்
வார்த்தையாகும் ஒரே மொழி

அன்பு பரிமாற்றமும்
மனமூட்டிய புன்னகையும்
இன்பம் தரும் மருந்தாகும்
கவலை நீக்கும் மந்திரமாகும்

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan