முடிவில்லாத் தொடக்கம் 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
05-02-2026

வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி
வலிகளும் இன்பமும்
வளைந்து நெளிந்து
வட்டமிடும் சுழற்சி

முடிந்து விட்டதென
மூடிவைத்த புத்தகத்தை
புதியதொரு தளிர்க்கரம்
புன்னகையோடு புரட்டுகிறது

அத்தியாயம் மாறலாம்
அனுபவம் கூடலாம்
முற்றுப்புள்ளி இடலாம்
மீண்டும் முகவுரை தொடரலாம்

இன்றைய துயரம்
நாளைய அனுபவம்
வாழ்வின் பொருளோ
முடிவில்லாத் தொடக்கம்.

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading