முதுமை

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_186

“முதுமை”

தன்னம் தனியாக
தள்ளாடி வாழாது
அன்பு உறவுகளுடன் உறவோடு இருப்பது!

முதுமை பருவம்
குழந்தை பருவம்
பாசத்துக்கும்
நேசத்துக்கும் ஆதங்கபடும் காலம்!

பசி குறையும்
உசி தெரியாது
அடம் பிடிப்பது
திடம் இல்லாது போகும்!

சொந்தங்கள்
அருகில் இருந்து
ஆயிரம் கனவுகள் மனதில் சுமந்து
எல்லாம் ஓர் நாள் மாறிபோக!

முதுமையிலும் சொந்த காலில் நில்
முடி நரைத்த போதும்
இளமையாகட்டும் வாழ்க்கை
இன்று இளமை நாளை முதுமை!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
06.04.25

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading