முதுமை

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_186

“முதுமை”

தன்னம் தனியாக
தள்ளாடி வாழாது
அன்பு உறவுகளுடன் உறவோடு இருப்பது!

முதுமை பருவம்
குழந்தை பருவம்
பாசத்துக்கும்
நேசத்துக்கும் ஆதங்கபடும் காலம்!

பசி குறையும்
உசி தெரியாது
அடம் பிடிப்பது
திடம் இல்லாது போகும்!

சொந்தங்கள்
அருகில் இருந்து
ஆயிரம் கனவுகள் மனதில் சுமந்து
எல்லாம் ஓர் நாள் மாறிபோக!

முதுமையிலும் சொந்த காலில் நில்
முடி நரைத்த போதும்
இளமையாகட்டும் வாழ்க்கை
இன்று இளமை நாளை முதுமை!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
06.04.25

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading