நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

முதுமை

முதுமை

தன்னந்தனியாக தள்ளாடி வாழாது வாழும்
இன்றோ நாளையோவென கடத்தப்படும் நாளும்
முடங்கியே கிடக்கும் வாழ்வு முதுமையில்
அடங்குமே ஆட்டம் இளமையின் வறுமையில்

கருகியே காயந்த பட்டமரம் போல்
சுருங்கிய தோலுடன் வனப்பில்லா மேல்
தொந்தரவு என்றே உறவுகள் நினைக்கும்
சொந்தமென உள்ளவரும் அருகிலில்லை துணைக்கும்

வீறுநடை போட்ட காலமதும் எங்கே
தாறுமாறு சீவியத்தின் கோலமுமாய் இங்கே
பாரமாய் தோன்றிவிடும் விடிகின்ற தினமும்
சேரவே மறுத்திடும் மகிழ்ச்சியின் கணமும்

ஒழிந்திடும் வாழ்வுடன் ஒட்டிய இனிமை
ஒளித்திடும் உறவுகளினால் கொன்றுவிடும் தனிமை
அவரவர்க்கு வந்தாலே கொடுமையதும் தெரியும்
கவனிப்பாரற்ற நிலையினிலே ஆறடியும் சரியும்

07-04-2025

Nada Mohan
Author: Nada Mohan