” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முதுமை

முதுமை

தன்னந்தனியாக தள்ளாடி வாழாது வாழும்
இன்றோ நாளையோவென கடத்தப்படும் நாளும்
முடங்கியே கிடக்கும் வாழ்வு முதுமையில்
அடங்குமே ஆட்டம் இளமையின் வறுமையில்

கருகியே காயந்த பட்டமரம் போல்
சுருங்கிய தோலுடன் வனப்பில்லா மேல்
தொந்தரவு என்றே உறவுகள் நினைக்கும்
சொந்தமென உள்ளவரும் அருகிலில்லை துணைக்கும்

வீறுநடை போட்ட காலமதும் எங்கே
தாறுமாறு சீவியத்தின் கோலமுமாய் இங்கே
பாரமாய் தோன்றிவிடும் விடிகின்ற தினமும்
சேரவே மறுத்திடும் மகிழ்ச்சியின் கணமும்

ஒழிந்திடும் வாழ்வுடன் ஒட்டிய இனிமை
ஒளித்திடும் உறவுகளினால் கொன்றுவிடும் தனிமை
அவரவர்க்கு வந்தாலே கொடுமையதும் தெரியும்
கவனிப்பாரற்ற நிலையினிலே ஆறடியும் சரியும்

07-04-2025

Nada Mohan
Author: Nada Mohan