நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

முத்தேவியர் அருள்

நகுலா சிவநாதன்

முத்தேவியர் அருள்

கல்வி வீரம் செல்வம் என்று
கனிவாய்க் கொடுக்கும் முத்தேவியர்
பல்கிப் பெருகும் அருளாலே
பயனும் உண்டு பாரினிலே
செல்வம் செழித்து வளர்ந்திடவே
செருக்கு இல்லா வாழ்வமைய
நல்ல கல்வி நாம் பெற்று
நன்றே வாழ்வோம் வீரத்துடன்

நவமாய்ப் பெருகும் நல்வாழ்வில்
நன்மை யுண்டே உலகினிலே
தவமாய் யான பொழுதுகளும்
தவிப்பே யின்றிப் பெருகட்டும்
யுகமாய் அன்பு பெருகிவிட்டால்
யுத்தம் மொன்றும் வராதென்பர்
நித்தம் கடவுளை வணங்கினின்றால்
நினைவு நல்லது கிடைத்திடுமே

தேவியர் அருளும் நன்னாளில்
தேசம் யாவும் மகிழ்வேந்த
ஞாயிறு உதித்து நலம்காக்க
நவராத்திரியும் வளம் காக்கும்

நகுலா சிவநாதன் 1822

Author: