முத்தேவியர் அருள்

நகுலா சிவநாதன்

முத்தேவியர் அருள்

கல்வி வீரம் செல்வம் என்று
கனிவாய்க் கொடுக்கும் முத்தேவியர்
பல்கிப் பெருகும் அருளாலே
பயனும் உண்டு பாரினிலே
செல்வம் செழித்து வளர்ந்திடவே
செருக்கு இல்லா வாழ்வமைய
நல்ல கல்வி நாம் பெற்று
நன்றே வாழ்வோம் வீரத்துடன்

நவமாய்ப் பெருகும் நல்வாழ்வில்
நன்மை யுண்டே உலகினிலே
தவமாய் யான பொழுதுகளும்
தவிப்பே யின்றிப் பெருகட்டும்
யுகமாய் அன்பு பெருகிவிட்டால்
யுத்தம் மொன்றும் வராதென்பர்
நித்தம் கடவுளை வணங்கினின்றால்
நினைவு நல்லது கிடைத்திடுமே

தேவியர் அருளும் நன்னாளில்
தேசம் யாவும் மகிழ்வேந்த
ஞாயிறு உதித்து நலம்காக்க
நவராத்திரியும் வளம் காக்கும்

நகுலா சிவநாதன் 1822

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading