முயற்சியே பலம் முனைப்பே திடம்

நகுலா சிவநாதன்
முயற்சியே பலம் முனைப்பே திடம்

முயற்சியே பலம் முனைப்பே திடம்
உயர்ச்சியே வலம் உழைப்பே நிதம்
தளர்ச்சியே இல்லா வாழ்வு மலர
அயர்ச்சியே இன்றி உழைப்பது வரமே!

ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வோர் விதை
விதையே முளைக்கும் திடமே பலம்
பலமாய் முயற்சிஅறுவடையாகும்- தினம்
பக்கவமாய் உழைப்பும் உறுதியாகும்

உழைக்கும் வர்க்கம் உயர்வே என்றும்
உறுதிபட கூறல் மகிமை யன்றோ!
வையத்தில் முயற்சியே வாழ்வானால்
வனப்போடு செழிக்கும் நல்வாழ்வு

முயற்சியே பலம் முனைப்பே திடம்
முயன்று வாழ்தல் பெருமையன்றோ?
சுற்றும் உலகில் சுந்தரவாழ்வும்
முற்றும் முயற்சி ஆதல்நன்றே!

நகுலா சிவநாதன் 1856

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading