நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

முற்றத்து நிலவு

ராணி சம்பந்தர்

சுடுகிற அளவிற்கு எங்கும்
படுகிற ஒளி பெரிதாகியே
கலங்கிய விழிகளை நியோ
தொட்டுச் செல்கின்றாய்

கண் இரண்டும் கூசக் கூச
காவாலிக் கையோ பட்டும்
கசங்காது பிரகாசித்ததே
உன் பரிமாண வளர்ச்சியது
பிரமாண்ட குளிர்ச்சியிலோ

மாலையில் புத்தம்புது சிவப்புக்
கூறைப் புடவை உடுத்தியே நீ வரும் அழகு கொள்ளைஅழகே
நீ மெழுகிக் குளித்து தலை குனிந்துவெட்கமுடன் வெளியே
வர சிவந்ததோ செவ்வானமும்

எது எப்படியோ உன் திருமுகம்
கண்ட சந்தோஷத்தில் ஒளிரக்
என் அகமனமும் பூத்துக் குலுங்க உனைப் பிடிக்க நானோ எட்டி எட்டி நடக்க
நீயோ அகப்படாது எட்டி
எட்டிப் போகின்றாயே .

Nada Mohan
Author: Nada Mohan