” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மேதின மேன்மையிலே…

உழைப்பெனும் உளியின் ஓர்தினமே
உழைப்பாளி வர்க்கத்தின் மேதினமே
நாளும் முட்கம்பி வேலிக்குள்
நம்மையே ஆளும் நம்சக்தி
வலம்வந்து மலர்கின்ற வையகம்
மெழுகென உருகிடும் உழைப்பாளி
ஒளி தந்து ஒளிர்கின்ற தொழிலாளி
இதயத்தை வருடிட வருவாயோ
ஈரத்தின் நிலவரம் உணர்வாயா
காயத்தின் தென்பு கூலியே
கடக்கின்ற பொழுதுகள் நம்பிக்கையில்
விதைக்கின்ற அறுவடை விருட்சங்களே
காலப் பரிதியின் கைங்கரியம்
ஞாலத்தின் மேன்மைக்கு ஒளியேற்றி
உயர்வே அனுதினம் விதைப்பாகும்
உயர்வழி ஒளிக்குள் இருபாதை
உயர்வும் தாழ்வும் உராய்ந்தெழுமே
அறுவடை அகிலத்தின் அச்சாணி
ஆயினும் தொழில்நிலை வெவ்வேறே
மேதின மேன்மையில் விழித்திறந்து
விருட்சத்தின் நாற்றை தோப்பாக்கு
வேற்றுமை தொழிலில் புகட்டாது
வென்றிட வாழ்தல் கொழுகொம்பே
அனுதின ஆற்றல் அடிப்பலமே
ஆளும் உலகை தொழில்த்தினமே!
நன்றி

நல்ல வடப்பிடிப்பில் சான்றுரைத்து
உயர்வினை அனுதினம் விதைப்பாக்கும்
உபாதையும் இடைக்கிடை வெளிப்படுமே
உயர்வும் தாழ்வும் உராய்ந்தெழும்
உள்ளக் குமுறலும்

Nada Mohan
Author: Nada Mohan