மே தினம் மேதினி வரம்..!!

சிவதர்சனி இராகவன்🙏
வியாழன் கவி 2141..!!

மே தினம் மேதினி வரம்..

மேதினி மேன்மையுறும்
மேதினமே வந்ததின்று
கூன் நிமிர்த்திக் குவலயம்
குதூகலிக்க வந்தது இத்தினம்
உழைப்பவர் வர்க்கம் உயர
தழைத்தவர் வாழ்வு சிறக்க
வரமென உதித்ததோ ஈங்கு
வரவென வந்ததே சிறப்பு..

ஊதியம் தன்னில் நேர்மை
மேதினி உணர்ந்தால் சீர்மை
வியர்வை மணிகளின் வீழ்கை
விருப்பொடு எழுவது மேன்மை
கரங்களில் கொண்டது உரமே
காத்திரம் கொள்வது மனமே
உண்டியும் செழிக்க உழவன்
ஊன்றுவான் காலை சேற்றுள்..

பிறப்புக்கும் இறப்புக்கும்
பெறுமதியாய் உழைப்பு
பேதமை இன்றுயே உயர்த்தும்
அரு மருந்து அதை அருந்து
உடல் வருத்து உனை உயர்த்து
இரப்பது சிறப்பல்ல ஈகைக்
குணமதை வளர்த்திடு வாழ்ந்திடு..
சிவதர்சனி இராகவன்
1/5/2025

Nada Mohan
Author: Nada Mohan