கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தமிழர் கலையாம் தமிழிசை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.02.2023

தமிழுக்குப் பெருமை சேர்ப்பது தமிழிசை
தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை
இயல் இசை நாடகமாகி முத்தமிழாய்
இசையும் கூத்தும் இணைந்து இசைத்தமிழாய்
இரண்டறக் கலந்தது வாழ்வோடு தமிழிசை !

ஆதியான தமிழிசைக்கு ஆதாரமாய்
இலக்கணம் வகுத்தது அகத்தியம்
தொன்மைக்கு சான்றானது தொல்காப்பியம்
புத்துயிரானது பக்திப்பனுவல்கள் பாசுரங்கள்
கலங்கரை விளக்கானது சிலப்பதிகாரம்
மறுமலர்ச்சியைச் செய்தாரே பாரதியாரும் !

இசையைத் தொழிலாக்கி
தொழிலுக்கு இசைக் கருவியானது பறை
பொழுதை இன்பமாய்ப் போக்க
யாழை இசைத்து மக்கள் மகிழ
தமிழிசைக்கு இலக்கணம் தந்தது யாழ்நூல் !

முத்தமிழின் நடுநாயகமாம் தமிழிசை
தாலாட்டோடு தொடங்கி நீராட்டு வரை
தமிழர் வாழ்வோடு பயணித்து
தமிழிசையாகித் தரணியை ஆளுது
தரணியெங்கும் தமிழிசை முழங்கட்டும்
மண்வளக் கலைகளும் மகுடம் சூடட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading