மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பட்டத்துராணி இரண்டாம் எலிசபெத் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 15.09.2022

பிரிட்டிஸ் சாம்ராச்சியத்தின் பட்டத்துராணி
நெறிதவறாது ஆட்சிபுரிந்த மகாராணி
பத்துவயதிலேயே பட்டத்து இளவரசி
இருபத்தைந்தில் மகாராணியாக முடிசூடி
அரியணையில் ஆட்சிபீடத்தில் அமர்ந்து
எழுபது ஆண்டுகளை நிறைவுசெய்த சாதனைப்பெண்
எலிசபெத் மகாராணி அகவை தொண்ணூற்றியாறில்
இவ்வுலகை விட்டு ஏகினாரே செப்ரெம்பர் எட்டினிலே !

இராணி எலிசபெத் இராஜமாதாவாகி
உலகைத் தன் உள்ளங்கையில் வைத்து
உன்னதமாய் ஜனநாயக முறையில்
பிரிட்டிஸ் சாம்ராச்சியத்தை ஆட்சி செய்து
பொதுநலவாய நாடுகளின் தலைவியுமாகி
மக்கள் மனங்களை வென்று
கடமையுணர்வோடு செயற்பட்டாரே !

குதிரை ஏற்றத்தில் சிறந்த வீராங்கணை
குதிரைப் பந்தயத்தின் தீவிர ரசிகை
செல்லப் பிராணிகளின் பிரியமான இராணி
காலம் காலமாய் நாடுகளைச் சூறையாடிய
வெள்ளையர்கள் மத்தியிலே
வெள்ளையுள்ளம் கொண்ட மகாராணி
கொள்ளை கொண்டாரே மக்கள் மனதை !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading