மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

வளர்ந்த குழந்தைகள் தாமே…….கவி….ரஜனி அன்ரன் (B.A) 27.04.2023

மாற்றுக் குழந்தைகள் அல்ல
வேற்று வாசிகளும் அல்ல இவர்கள்
மாற்று வழியினில் மகத்துவமான கண்மணிகள்
ஆற்றலும் ஆளுமையும் அதீத திறனும் கொண்ட
போற்றுதலுக்குரிய பொன்மணிகள்
ஆற்றுப்படுத்தி அரவணைத்தாலும்
மனதளவில் என்றும் அவர்கள் குழந்தைகளே !

துடிப்பும் துடியாட்டமும்
திறனும் தீரமும் மிக்க திறமைசாலிகள்
தீவிரமாய் செயற்படும் செல்வங்கள்
பேறு பெற்ற கண்மணிகளை
வளர்ந்த குழந்தைகளை
பொறுமை கொண்டு கையாண்டால்
பெருமை மிக்கவர் ஆக்கிடலாம் !

பாமுக ஆசானும் பற்றோடு
அழகிய மலர்களை அரவணைத்து
அவர்களின் திறமைக்கு களமும் அமைத்து
உணர்வினை மதித்து உற்சாகமும் கொடுத்து
உலகமே வியக்க திறமைகளை அரங்கேற்றி
உன்னத சேவையினை ஆற்றி வருகின்றாரே
உரமோடு கை இணைப்போம் நாமும்
வளர்ந்த குழந்தைகளுக்காய் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading