” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ இரத்தம் சிந்திய யுத்தம்……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 19.10.2023

இருபதாம் நூற்றாண்டில்
உலகம் சந்தித்த சிக்கலான யுத்தம்
நீண்டகாலப் போராட்டம்
நீதிக்கான போராட்டம்
நூற்றாண்டுக் கால மோதல்
நொட்டிப் பார்த்து சீண்ட
நொடிப் பொழுதில் வெடித்தது போர்மேகம்
இரத்தம் சிந்திய யுத்தமாகி
இசைவிருந்தை இறுதி விருந்தாக்கியதே !

யூதர்களின் பூர்வீகம் அரேபியரின் சொந்தமென
நாடு இரண்டாகப் பிளவுபட
ஜெருசலேம் சர்வதேச நகரமாகி
மும்மதங்களின் புனிதத் தலமாகி நிற்க
உனக்கா எனக்கா நாடு சொந்தமென
தொடர்கிறது யுத்தமும் !

நிலப்பசியின் வன்மம்
ஆயுதங்களால் அச்சுறுத்தி குண்டுமழை பொழிந்து
ஆயிரமாயிரமாய் அப்பாவிகளைக் கொன்று
நிலமெல்லாம் இரத்தம் பாய
மரண ஓலங்கள் உலகையே உலுக்குது
அமைதியெனும் ரோஜா மலரட்டும்
ஐ.நா.வே ஐக்கியத்தோடு நிறுத்திவிடு யுத்தத்தை !

Nada Mohan
Author: Nada Mohan